திருவில்லிபுத்தூர், மார்ச் 6- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தி யல் கல்லூரியில் தேசிய மருந்தாக்கியல் மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 4, 5) நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்து வப் பல்கலை. அங்கீகாரத்துடன் மருந்து அறிவியல் அறக்கட்டளை, இந்தியன் மருந்து சங்கம், டிஏஎன்ஐபிஏ அறக்கட் டளை ஆகியன இணைந்து ‘உலக அள வில் தொழில்சாலைகளில் தற்போதைய மருந்தாக்கியல் நுட்ப வளர்ச்சி’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டை நடத்தின. கல்லூரித் தலைவர் க.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். தாளாளர் அறிவழகி ஸ்ரீதரன், செயலர் எஸ்.சசி ஆனந்த், இயக்குநர் எஸ். அர்ஜுன் கலசலிங்கம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மதுரை மண்டல மருந்துகள் கட்டுப் பாட்டுத் துணை இயக்குநர் ரவிச்சந்திரன், விருதுநகர் மண்டல மருந்துகள் கட்டுப் பாட்டு துணை இயக்குநர் இளங்கோ, சென்னை டிஏஎன்ஐபிஏ அறக்கட்டளைச் செயலர் யூசுப், ஐகாரஸ் ஹெல்த்கேர் நிறு வன இயக்குநர் ஆர். இளங்கோ ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டில் விஞ்ஞானி முகேஷ் சுப்பிர மணியன், தனியார் நிறுவன இணை இயக்கு நர் பிரசாத் பழனிச்சாமி, தனியார் நிறுவன இயக்குநர் ஆனந்த் செல்வம், தனியார் நிறு வன இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். கல்லூரித் தலைவர் க.ஸ்ரீதரன் மாண வர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, கல்லூரி முதல்வர் வெங்க டேஷன் வரவேற்றார்.