districts

img

தேசிய திறனாய்வுத் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

தென்காசி,டிச.27- செங்கோட்டை நூலகத்தில் ஒன்றிய அரசின் தேசிய திறனாய்வு (NMMS) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு  தொடங்கியது. செவ்வாய்க்கிழமை முதல் முதல் 31.12.2022 வரை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை நூலகத்தில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும். தொடக்க விழாவில்  மாவட்ட கல்வி அலுவலர் சுடலை  கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். ஜே .பி கல்வியியல் கல்லூரி மாணவிகள் பயிற்சி வகுப்பை நடத்தினர். எல் என் சேரிட்ரபிள் டிரஸ்ட் இயக்குநர் நீலகண்டன் ஆகாஷ், அகாடமி இயக்குனர் மாரியப்பன், ஆசிரியர் சித்தாய், ஜே பி கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி  ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். வாசகர் வட்டப் பொருளாளர் தண்டமிழ்தாசன், பா. சுதாகர் வரவேற்புரை வழங்கினார். நூலகர் ராமசாமி  நன்றி தெரிவித்தார். செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 10 பள்ளி களில் இருந்து 122 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.