districts

img

பணி நிரந்தரம் கோரி எம்.ஆர்.பி. செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 5-  7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றிவரும் எம்ஆர்பி செவிலியர்களை பணிநிரந்தரம் செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு எம். ஆர். பி. செவிலி யர்கள் மேம்பாட்டு சங்கம் சார்  பில் கோரிக்கை அட்டை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  மதுரை மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் புதனன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்  டத் தலைவர் டி. ராஜி தலை மை வகித்தார், மாவட்டச் செய லாளர் பிரேமா ,கிளைத் தலை வர் தாமரை, பொருளாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பேசி னர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க. நீதிராஜன், தோழமைச்சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, இரா. தமிழ் ஆ. அமுதா ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.