திருவில்லிபுத்தூர், ஏப்.28- மலை மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வத்திராயிருப்பு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அத்திகோயில், கான்சாபுரம், கொடிக்குளம், கிழவன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை மாடுகள் வளர்ப்போர் மாடுகளுடன் வந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிக்குமார் தலைமை தாங்கினார்.வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் அனுப்புவதாக உறுதி கூறினார். பின்னர் வட்டாட்சியர் அலுவ லகத்திலிருந்து முத்தாலம்மன் சாவடி வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில், விவசாய சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் வி.முருகன், தென்னை விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆர்.முத்தையா, அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்ட நிர்வாகி சுந்தர பாண்டியன், மலை மாடுகள் வளர்ப் போர் சங்க நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராதாகிருஷ்ணன், மாரிமுத்து, கருப்பையா, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.