districts

img

நூறுநாள் வேலையை நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவுபடுத்தக் கோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, செப். 24 - ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தியும் என்பிஎச்எச் (NPHH) ரேசன் கார்டை பிஎச்எச் (PHH) ஆக மாற்றி அரசு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும் நூறு நாள் வேலையை நகர்ப்புற  பகுதிகளுக்கும் விரிவுப டுத்தி வருடத்திற்கு 200 நாள்  வேலை வழங்கி நாள் ஒன்று க்கு ரூ.600 சம்பளம் வழங்கக்கோரியும் திருச் செந்தூர் தாலுகா அலுவ லகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  பின் னர் 62மனுக்கள் கொடுக்கப் பட்டன. மாவட்ட துணைத்தலை வர் கலைச்செல்வி தலைமை  வகித்தார். மாவட்டச்செய லாளர் பி.பூமயில் கோரிக்கை களை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பன்னீர்செல்வம் (விதொச)  , சிபிஎம் உடன்குடி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம்,  சிபிஎம் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முத்து குமார் ஆகியோர் பேசினர். மாதர் சங்க உடன்குடி ஒன்றிய தலைவர் செல்வி, செயலாளர் உலகமணி  ஸ்டெல்லா, சரஸ்வதி ,செ பஸ்டீன் ,மாற்றுத்திறனா ளிகள் சங்கம் அப்துல்லா ,மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;