தூத்துக்குடி,அக். 26 தூத்துக்குடி வாகைக்குளம் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் 7ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு விழாவை தொடங்கி வைத்தார். ஸ்காட் கல்வி குழும துணைத் தலைவர் ஜே.எக்ஸ். அமலி கிளிட்டஸ் பாபு சிறப்புரை ஆற்றினார். தமிழக அரசின் சுற்றுலா துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஐ.ஏ.எஸ். தலைமை விருந்தினராக பங்கேற்றார். மூத்த திட்ட அதிகாரி ஆதஷ்ய பரிடா, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை விருந்தினர் சந்தீப் நந்தூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழாப் பேருரை ஆற்றினார். விழாவில் பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை பேராசிரியர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக நிர்வாக அதிகாரி விக்னேஷ் நன்றியுரை ஆற்றினார்.