நாகர்கோவில், பிப். 9- திருநெல்வேலியில் போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர்களுக்கு ஆதர வாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் தெ.தி. இந்து கல்லூரியில் மூட்டா ஆசிரியர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை, தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி நிர்வாகத்தினர், அரசு விதிமுறை களுக்கு எதிராகச் செயல்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகி றது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர், தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். அரசு விதிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரிச் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று போராடிய, கல்லூரிப் பேராசிரியர்கள் எஸ். பெஸ்கி ஆன்டனி இராயன், ஜி.சகாய அந்தோணி சேவியர் இருவரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இரண்டு பேராசிரியர்களின் பணி யிடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரி முதல்வரை உடனடியாக நிய மனம் செய்ய வலியுறுத்தியும், கல்லூரி யில் ஒவ்வொரு துறையிலும் பணியில் மூத்த பேராசிரியரை துறைத் தலைவ ராக நியமிக்கக் கோரியும், அரசு விதி முறைப்படி இணை முதல்வர் மற்றும் தேர்வாணையரை நியமிக்க வலியுறுத்தி யும் இக்கல்லூரியில் பணியாற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் வளாகத்திற் குள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் பேராசிரி யர்களுக்கு ஆதரவாக பிப்.8 செவ்வா யன்று தெ.தி. இந்துக்கல்லூரி நுழைவு வாயிலில் வாயில் போராட்டம் நடை பெற்றது. கிளை தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தார். மூட்டா மத்திய தலைவர் இராதாகிருஷ்ணன் மற்றும் மூட்டா கிளை செயலாளர் ம.மகேஷ் உள்ளிட்டோர் பேசினர். திரளான பேராசிரி யர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.