புதுதில்லி 18ஆவது மக்களவை தேர்த லில் “இந்தியா” கூட்டணி யின் அபார எழுச்சியால் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தயவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், மக்களவை போல மாநிலங்களவையிலும் பாஜக பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. நாடாளுமன்ற மாநி லங்களவை மொத்தம் 245 உறுப்பி னர்களைக் கொண்டது. இதில் 12 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவர். இந்த மொத்த எண்ணிக் கையை கணக்கிடும்போது ஒரு மசோதாவை நிறைவேற்ற 123 உறுப்பினர்கள் ஆதரவு தேவையா கும். மாநிலங்களவை நியமன எம்.பி.க்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகால், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேரும் ஞாயிறன்றுடன் ஓய்வு பெற்றனர். மக்களவை தேர்தலில் போட்டியி டுவதற்காக மாநிலங்களவை ராஜினாமா செய்தவர்கள் என 19 இடங்கள் காலியாக உள்ள நிலையில், மாநிலங்களவையின் பலம் 226ஆக குறைந்துள்ளது. மசோதா நிறைவேற்ற முடியாது மாநிலங்களவையில் தற்போது பாஜகவின் பலம் 86 ஆக உள்ள நிலையில், தனது தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த பலம் 101 ஆக உள்ளது. காங்கிரஸ் தலை மையிலான “இந்தியா” கூட்டணி க்கு 87 மாநிலங்களவை உறுப்பி னர்கள் உள்ளனர். எந்த கூட்டணி யிலும் சேராத கட்சிகளின் பலம் 29 ஆக உள்ளது. மாநிலங்களவை யில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 114 உறுப்பினர்கள் தேவை என்ற சூழல் உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 101 உறுப்பி னர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால் மோடி அரசு தான் விரும் பும் மசோதாவை நிறைவேற்ற முடி யாத சூழலை சந்திக்கும் நிலைமை உருவாகியுள்ளது. பாஜகவிற்கு மறைமுக ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை கடந்த காலங்களில் பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளின் ஆதரவு டன் மோடி அரசு மாநிலங்கள வையில் பெரும்பான்மை பெற்று மசோதாக்களை சட்டமாக மாற்றி யது. ஆனால் இம்முறை அவ்வாறு நடக்க சாத்தியமில்லை. காரணம் 9 உறுப்பினர்களை கொண்ட பிஜு ஜனதா தளம் எதிர்க்கட்சியாக செயல் படப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதே போல ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு நெருக்கமான ஆதரவை வெளியே காண்பித்துக் கொண்டாலும் “இந்தியா” கூட்டணியின் மறை முக ஆதரவாளர் போன்றும் செயல் பட்டு வருகிறது. அதே போல 4 உறுப்பினர்களை கொண்ட பிஆர்எஸ் கட்சியும், 3 உறுப்பினர்க ளை கொண்ட அதிமுகவும் மோடி அரசை ஆதரிக்க வாய்ப்பில்லை. இதனால் மசோதாக்களை நிறை வேற்றுவதில் மோடி அரசுக்கு மிக மோசமான அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் கையேந்தும் நிலைமையில் பாஜக
மக்களவையில் பெரும்பான்மைக்காக தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் கையேந்தி மோடி மூன்றாவது முறையாக பிரதமர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அதே போல மாநிலங்களவையிலும் பிஜு ஜனதாதளம், பிஆர்எஸ், அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி களிடம் பெரும்பான்மைக்காக மீண்டும் கையேந்த வேண்டிய சூழலை பாஜக எதிர்கொண்டு வருகிறது.