மதுரை, மார்ச் 11- பாலுக்கு லிட்டருக்கு ரூ.7 வழங்கவேண்டுமென்ற தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்க மதுரை ஆவின் நிர்வாகம் மறுத்துவிட்டதால் பால் உற்பத்தி யாளர்கள் சனிக்கிழமை காலை ஆவினுக்கு வழங்கும் பாலை நிறுத்தினர். முன்னதாக வெள்ளிக்கிழமை ஆவின் அதிகாரிகள், துணைப்பதி வாளர், ஆவின் மேலாளர் ஆகி யோர் கடைசி கட்ட முயற்சியாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாவட்டத் தலைவர் பெரியகருப்பன் செயலாளர் உக்கி ரபாண்டி, தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் வெண்மணிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் முத்துப் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை காலை பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவ டைந்தது.
ஆவின் நிர்வாகம் மிரட்டல்
மாவட்ட கூட்டுறவு பால் உற் பத்தியாளர்கள், ஒன்றியத்தை சார்ந்த பால் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர் பிப்பான் மையங்களை நடத்தும் சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் பெறப்படும் மொத்த பாலையும் தவறாமல் கொள்முதல் செய்து மதுரை ஆவினுக்கு வழங்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் நுகர் வோர்கள் பாதிக்காத வண்ணம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்ட விதி களின்படி கடுமையான நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டல் விடுத்திருந்தது. ஆவின் நிர்வாகத்தின் மிரட்ட லுக்குப் பணியாமல் சனிக்கிழமை காலை சுமார் 23 ஆயிரம் லிட்டர் பாலை உற்பத்தியாளர்கள் முதற் கட்டமாக நிறுத்தினர்.
பணிந்த நிர்வாகம்
பால் வரத்து குறைந்ததால் ஆவின் நிர்வாகம் மீண்டும் சனிக் கிழமை காலை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில், “ பால் விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வரவில்லை என்றால் மார்ச் 17-ஆம் தேதி முதல் மாநில அளவில் நடத்தப்படும் சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்ற வேண்டுகோளை ஆவின் நிர்வா கம் ஏற்றுக்கொண்டதன் அடிப்ப டையில் சனிக்கிழமை மாலை முதல் வழக்கம் போல் சங்க உறுப்பி னர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டது. போராட்டம் தற் காலிகமாக விலக்கிக்கொள் ளப்பட்டுள்ளது. மதுரை ஆவினில் பால் வரத்து குறையும் காலங்களில் சங்கங்கள் அனுப்பும் பாலிற்கு குறைவின்றி விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலுக்கு லிட்டருக்கு ரூ.3 உயர்வு அளிக்கும் பட்சத்தில் மதுரை மாவட்டத்திற்கு ஊக்க விலை வழங்க வேண்டும். இது குறித்து பால்வளத்துறை அமைச் சர் மற்றும் ஆணையரிடம் பேசு வதற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை யும் ஏற்று ஒப்பந்தத்தில் ஆவின் பொதுமேலாளர் சாந்தியும், துணைப்பதிவாளரும் (பால்வளம்) கையெத்திட்டுள்ளனர்.