districts

img

தியாகி என்.வெங்கடாச்சலம் நினைவு தின கொடியேற்று நிகழ்ச்சி

தஞ்சாவூர், செப்.21- வர்க்கப் போராளி, மகத்தான மக்கள் தலைவர், இராயமுண்டான்பட்டி தியாகி என். வெங்கடாசலம் (என்.வி) 44 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சாவூர் மாநகரக் குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தியாகி  என்.வியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி  செலுத்தி, உறுதிமொழி ஏற்று, செவ்வ ணக்கம் செலுத்தப்பட்டது.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான எம்.என். எஸ்.வெங்கட்டராமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன், சி.ஜெயபால், பி.செந்தில்குமார், மாநகரச் செயலாளர் என்.குருசாமி ஆகியோர் பேசி னர்.  மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.சிவகுரு, களப்பிரன், என்.சரவணன், ஆர். கலைச்செல்வி, சா.ஜீவபாரதி, ஜி.அரவிந்த சாமி, மாநகரக் குழு உறுப்பினர்கள் பி.ரா ஜன், எம்.ராஜன், கோஸ்கனி, நசீர், வடிவே லன், கரிகாலன், வசந்தி, சாந்தா, ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக பழைய பேருந்து நிலைய கிளைச் செய லாளர் மாதவன் நன்றி கூறினார். தீக்கதிர் சந்தா இந்நிகழ்ச்சியில் தீக்கதிர் முதன்மை பொது மேலாளர், எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமனிடம் மாநகரக்குழு சார்பில் 36 தீக்க திர் ஆண்டுச் சந்தாவுக்கான தொகை வழங்கப் பட்டது.

;