திருநெல்வேலி, ஏப். 29- நெல்லை மாவட்டத்தில் சனிக்கிழமை 350 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறு கிறது என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரி வித்துள்ளார்.நெல்லையை அடுத்த ராமை யன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டியல் இன மக்களுக்கான உப திட்டத்தில் கால்நடை களுக்கான கண்காட்சி நடைபெற்றது. தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி சேகரிப்பு திட்டத்தின்கீழ் மண்டல அளவில் நடைபெறும் இந்த கண்காட்சியில் கால்நடைகள், கோழி கள், ஆடுகள், நாய்கள், வான்கோழி, வாத்து போன்றவை கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டி ருந்தன. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும் இந்த கண் காட்சியை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் பழனிசாமி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இதில் நாட்டினத்தைச் சேர்ந்த ஆடுகள், கோழிகள், வாத்து உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை கால்நடை பண்ணையாளர் கள், கால்நடை மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர்.மேலும் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவி களும் கண்காட்சியில் பங்கேற்றனர். இந்த கண் காட்சியின் மூலம் கால்நடை மற்றும் கோழிகளின் நோய் மேலாண்மை மூலமாக உற்பத்தியை பெருக்குவது குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தங்க பாண்டியன், பல்கலைக்கழக தேசிய நச்சுயிரி ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை, ஒருங்கி ணைப்பாளர் ரவி முருகன், ராமையன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 2-வது நாளாக நாளை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் சபாநாயகர் அப்பாவு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆட்சியர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- வட மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தி லும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை 350-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது.மாநகர பகுதிகளில் 150 இடங்கள் மற்றும் பேரூராட்சி, நகராட்சி பகுதிக ளில் ஆரம்ப சுகாதரநிலையங்கள் என 200 இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது.நெல்லை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 90 சதவீதம் பேர் போட்டுள்ளனர். 65 சதவீதம் பேருக்கு 2- தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மெகா முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.15- வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயது வரை உள்ள பள்ளி மாண வர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 2.50 லட்சம் பேர் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்க ளாக உள்ளனர். அவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் சம்பந்தப்பட்ட வர்களுக்கு ‘மெசேஜ்’ அனுப்பப்படுகிறது. போன் மூலமும் தகவல் தெரிவிக்கப்படுகிறது என்று கூறினார்.