கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), செந்தில்நாதன் (சிவகங்கை) ஆகியோர் முன்னிலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.74 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் உறுப்பினர் புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.