districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், ஏப்.8-  உலக சுகாதார தினத்தினை கொண்டாடும் விதமாக திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் அனைத்து ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.  முகாமில் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மல்லி ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, சிவகுமார், சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஊராட்சி பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு குறைபாடு உள்ளவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் வழங் கப்பட்டன.