districts

img

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ,மாணவியர்களுக்கு பதக்கம்

விருதுநகர், ஜூன்.23- முதலமைச்சர் கோப்பைக்கான  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மருத்துவக் கல்லூரி யில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மக்களவை உறுப்பினர்கள் நவாஸ்கனி( இராமநாதபுரம்), தனுஷ் எம்.குமார் (தென்காசி), சட்டப்பேரவை உறுப்பி னர்கள் சீனிவாசன்( விருதுநகர்), ரகுரா மன்( சாத்தூர்), தங்கப்பாண்டியன்( இராஜ பாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க 331 மாணவர்கள் மற்றும் 262 மாணவிகள் என மொத்தம் 593 பேர் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை  1279 மாணவர்கள் மற்றும் 841 மாணவிகள் என மொத்தம் 1920 பேர்  பெற்றுள்ளனர். அவர்களுக்கு பரிசுத் தொகை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்க ளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். மேலும் இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட விளை யாட்டு அலுவலர் குமாரமணிமாறன், மண்டல முதுநிலை மேலாளர் பியூலா ஜெயின் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.