மதுரை சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி வட்டத்தில் கிருஷ்ணா மகாலில் மே 6 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு, வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பல்வேறு துறைகளின் சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 57 லட்சத்து 54 ஆயிரத்து 693 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஸ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ர.சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.