கொச்சி, பிப். 9- எர்ணாகுளம் களமசேரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கின்ஃப்ரா தொழில் பூங்காவிற்குள் செயல்பட்டு வரும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் கிரீன் லீஃப் நிறு வனத்தில் காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கொச்சி நகர தீயணைப்புப் படையின் பல்வேறு பிரிவுகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத் தின் போது இங்கு தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கிரீன் லீஃப் தொழிற்சாலைக்கு அருகில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உயரிழப்பு ஏதுமின்றி தீ அணைக்கப் பட்டது. ஆனால், கிரீன் லீஃப் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.