districts

img

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மேம்பால பணிக்காக குடியிருப்புகளை அகற்றுவதா? தேனி ஆட்சியரகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.7- நாடு முழுவதும் கொரோனா தொற்று 3 ஆவது அலை பரவி வரும் வேளையில் மாற்று இடம் கொடுக்காமல் மேம்பால பணிக் காக குடியிருப்புகளை அகற்று வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தேனி ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேனி மதுரை சாலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் குடியிருந்து வருகிறார் கள். தற்போது ரயில்வே மேம் பாலம் அமைப்பதாகக் கூறி தேசிய நெடுஞ்சாலை துறையினர் குடியிருப்புகளை உடனடியாக காலி செய்யக் கூறியுள்ளனர். இதனால் அவர்கள் வேறு வழி யின்றி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா தொற்றின் 3 ஆவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் வேளையில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை குடி யிருப்புகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் இ.தர்மர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் டி.வெங்கடே சன், மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் சி.முருகன், சி.முனீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.நாகராஜ் ,டி.ஜெயபாண்டி, தாலுகா குழு உறுப்பினர்கள் ஏசி.காமுத்துரை, பொன்னுத்துரை, கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது மாற்று இடம் கொடுப்பதாக தலைவர் களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி யளித்தார்.