சென்னை, நவ. 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதி, எம்எம்டிஏ காலனி கிளை உறுப்பினர் கே.சரவணன் செவ்வாயன்று (நவ.23) காலமானார். அன்னாரது உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திரு வேட்டை, பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், திமுக தெற்கு பகுதிச் செயலாளர ராமலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் கோயம்பேடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.