மதுரை, ஜூலை 22 - மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடைசித் தொழிலாளி இருக்கும் வரை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் நீதி பதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பு திங்களன்று விசார ணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் கூறுகையில் “ஜுலை 4,5 ஆம் தேதி களில் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது. அதில், 436 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலா னோர் தென்காசி, நெல்லை, கேரளா, அசாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இலவச வீட்டுமனைப்பட்டாவில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மணி முத்தாறு, பாப்பான்குளம் பகுதியில் 240 வீடுகள் உள்ள நிலையில், ரூ.7 லட்சம் மாநில அரசும் ரூ.1.5 லட்சம் ஒன்றிய அரசும் வழங்கும். மீதமுள்ள தொகையை அம்மக்கள் செலுத்த வேண்டும். டான் டீ நிர்வாகத்தால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலாது “ என தெரி விக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “ஏன் அரசால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இய லாது?” என கேள்வி எழுப்பினர். வனத்துறையின் அறிக்கையில் அதற்கான விபரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
வனத்துறை கைவிரிப்பு
வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “மாஞ் சோலை பகுதி உயிரி பன்மயத்திலும், சுற்றுச்சூழலிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலை யைப் பேண குத்தகைக்கு விடுவதற்கு முந்தைய நிலைக்கு மாஞ்சோலை யை கொண்டு சென்று பராமரிப்பது அவசியம். தேயிலை தோட்ட தொழி லாளர்களில் பலர் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். பலர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் வந்துள்ளனர். ஆகவே 3 தலை முறைகளாக வனத்தினுள் வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் கையாள்வதிலும் கேள்வி எழுகிறது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் அசாம் மற்றும் கேரளா வில் இருந்து புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் வேலை செய்கிறார்கள்.
அரசியல் ஆதாயங்களை பெறு வதற்காக, சிலர் பொய்யான வாக்குறு திகளை தந்து. குழப்பி வருகிறார்கள்.
இந்த வழக்கில் வனப்பகுதிகளில் சலுகை வழங்கப்படும் பட்சத்தில், அதனை பிற தொழிலாளர்களும் கோரினால், மேற்கு தொடர்ச்சி மலை யின் பழமையான காடுகள் இழக்கப்படும் சூழல் உருவாகும். இந்த காரணங்களால் மாஞ்சோலை தேயி லை தோட்டத்தை டேன் டீ நிர்வா கத்திற்கு வழங்குவதும் இயலாதது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதிகள், கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் கூடுதல் மானியம் வழங்கலாமே? வீடுகள் வழங்குகையில் மீதமுள்ள தொகையை அம்மக்களிடமிருந்து வசூலிக்காமல் இருக்கலாமே? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில், உரிய தகவல் பெற்று தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிபிடிசி நிறுவனம் தரப்பில், “மாஞ் சோலை தோட்ட தொழிலாளர்களுக் கான 75 சதவீதம் செட்டில்மெண்ட் தொகை 11 கோடியே 32லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. தொழி லாளர்கள் நாகர்கோவில் தொழி லாளர் நலத்துறை இணை ஆணை யரிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.
உத்தரவு
மாஞ்சோலையில் கடைசி தொழிலாளி இருக்கும் வரை அங்கே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் மின்சாரம் குடிநீர் இணைப்பு துண்டிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மறுவாழ்வு வேண்டி மனு தாக்கல் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து பொது நல வழக்கு என்ற பெயரில் விளம் பரங்களை தேடி தொழிலாளர் அல்லா தோர் மனு தாக்கல் செய்து நீர்த்துப் போகச்செய்ய வேண்டாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் வழக்கை செவ்வாய்கிழ மைக்கு ஒத்திவைத்தனர்.