சின்னாளப்பட்டி, செப்.11- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மகா கவி பாரதியாரின் 102 ஆவது நினைவு நாள் கருத்தரங்கம் திங்களன்று நடைபெற்றது. நிகழ்விற்கு பல்கலை., பதிவாளர் (பொ) பேரா.ல. இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாரதி யார் ஆய்வக ஒருங்கி ணைப்பாளர் பேரா.பா. ஆனந்த குமார், தமிழ்த் துறைத் தலைவர் புல முதன்மையர் பேரா.ஒ.முத் தையா, எழுத்தாளர் பெரு மாள் முருகன் ஆகியோர் பேசினர். இலக்கியப் போட்டி களில் வெற்றி பெற்ற மாண வர்களுக்குப் பெருமாள் முருகன் பரிசுகள், சான்றி தழ்களை வழங்கினார். தமிழ்த் துறை உதவிப் பேரா சிரியர் சி.சிதம்பரம் நன்றி கூறினார். நிகழ்வில் பல் வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வா ளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.