மதுரை, ஜூன் 14- குறைவான ஊதியம் வழங்குவதை கண்டித்து மதுரை ஆனையூரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவல கத்தை மாநகராட்சி பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் புதனன்று முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த எல்சிவி வாகன பணியாளர்களுக்கு தலா 15,400 ஊதியத்திற்கு பதிலாக 10,000 ரூபாய் ஊதியம் வழங்குவதாகவும், 250 ஒப்பந்த தூய்மை பணியாளர் களுக்கு தலா 14,500 ஊதியத்திற்கு பதி லாக 12,800 ரூபாய் ஊதியம் வழங்கு வதாக கூறி பணிகளை புறக்கணித்து சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனை யடுத்து மாநகராட்சி சார்பிலும், ஒப்பந்த நிறுவனத்தின் சார்பிலும் பணியா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது, அதன்படி பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத் தொகை திருப்பி தருவதற்கு ஒப்பந்த நிறுவனம் ஒத்துக் கொண்டதால் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது போராட்டத்தில் மாவட்ட பொதுச் செய லாளர் ம. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.