மதுரை, ஜூன் 9- ஸ்டார் ஹெல்த் என்ற தனியார் நிறுவனம் மூலம் நடைமுறைப் படுத்திய மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் தற்போது பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறது
இத்திட்டத்தில் தமிழகத்தில் ஏராளமான தனியார் மருத்துவ மனைகள் ஒப்பந்தத் தில் இடம் பெற்றுள்ளன. இருந்த போதிலும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் தரப்படும் என்று பேக்கேஜ் முறை யில் சிகிச்சைகளுக்கான தொகை வழங்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டங் கள் நடத்தி வருகிறது. எனினும் அவ்வப்போது சில குறைபாடு கள் சரி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கட்டணமில்லா சிகிச்சை எனும் அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
தற்போது வெளிவந்த அரசாணை மூலம் அரசு மருத்துவமனையி லும் சிகிச்சை பெற்றுக் கொள்ள லாம் என்ற அறிவிப்பு வரப்பெற்று உள்ளது. தனியார் மருத்துவமனை கள் ஏக போக லாபத்தை கணக்கில் கொண்டு ஏராளமான தொகையை சிகிச்சைக்காக வசூலித்து வரு கின்ற சூழ்நிலையில் அவ்வப்போது அரசாணையில் உள்ளபடி சிகிச்சை தொகை குறிப்பிடப்படவில்லை என்றும் நோயாளிகளின் புகார் களின் அடிப்படையிலும் இத்திட்டத் திலிருந்து புகாருக்கு உள்ளான மருத்துவமனைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இத்திட்டத்தில் இருந்து தற்காலிக மாக தடை செய்யப்பட் டுள்ளது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் க.நீதிராஜா தெரிவித்துள்ளார்.