districts

img

மதுரை பாத்திமா கல்லூரி 70 ஆவது ஆண்டு விழா - சு.வெங்கடேசன் எம்.பி., பங்கேற்பு

மதுரை, ஜூன் 29-  மதுரை பாத்திமா கல்லூ ரியின் 70 ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அருட்தந்தை அந்தோணி பாப்புசாமி, தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர்  அல்போன்ஸ், துணைவேந் தர் குமார், மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் விழா மலரை வெளியிட்டு உரையாற்றினர்.  இதில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசுகையில், 1950  ஆம் ஆண்டு பெண்களுக் கென ஒரு கல்லூரி துவங் கப்பட்டது என்றால் அது பாத்திமா கல்லூரிதான். மது ரையில் ஒரு இடம் 70 ஆண்டு களாக இவ்வளவு அழகாக  இருக்கிறது என்றால் அது  பாத்திமா கல்லூரி தான். எப்  போதும் அறிவைவிட சிறந்த  அழகு எதுவுமில்லை. ஆனால் அறிவை கொடுக்கக்கூடிய இடமே அழகாக இருக்கின் றது. நிறைய கனவுகள் இருக்கின்ற இடம் கல்லூரி.  ஒரு பெண்ணின் வாழ்க்கை யில் மாற்றம் ஏற்பட்டால் அது  மிகப் பெரிய தாக்கத்தை உரு வாக்கும். பல ஆயிரம் பெண்  களிடம் மாற்றத்தை உரு வாக்கிய நிறுவனத்தை வணங்க வேண்டும் என்ப தற்காகவே நான் வந்துள் ளேன். மற்ற மாநிலங்களை விட உயர்கல்வியில் முன் னேறியுள்ள மாநிலம் தமி ழகம். பெண்களின் உயர் கல்வியில் தமிழகம் முத லிடத்தில் உள்ளது. எனவே தான் பழமை வாதம் பேசு கிறவர்கள் இந்த இரண்டை யும் குறி வைத்து தாக்கு கிறார்கள். மதுரையின் கல்வி வளர்ச்சிக்கு பாத்திமா கல்  லூரி மிகப்பெரும் பங்கினை செய்துள்ளது. அன்பும் கரு ணையும் அடுத்த மனிதன்  மீது காட்டும் அக்கறையும் தான் வாழ்க்கை. அதை கல்வி நிறுவனங்கள் கற்றுக்  கொடுக்கவேண்டும். சுயமரி யாதையையும் கற்றுத்தர வேண்டும் என்று தெரிவித் தார்.