மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் அதன் தலைவரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் அனீஷ்சேகர், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மேயர் இந்திராணி, துணைமேயர் தி.நாகராஜன் மற்றும் டிசா கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.