மதுரை, ஆக. 1- தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மதுரை மாவட்ட 9 வது பேரவை மாவட்ட தலைவர் முனைவர் சு. கிருஷ்ணன் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. முன்னதாக சங்கத்தின் கொடியினை மாநிலத் தலை வர் என். எல். சீதரன் ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் பி.தின கர்சாமி வரவேற்று பேசி னார். மாவட்ட செயலாளர் அ. பால்முருகன் நிதிநிலை அறிக்கையும், பொருளாளர் என். ஜெயராமன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம் மற்றும் தோழ மைச்சங்க தலைவர்கள் மு.பரமேஸ்வரன், எஸ்.டி. எஸ்.திருவேங்கடராஜ், வி. பிச்சைராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசிர். மாநில பொருளாளர் என். ஜெயச் சந்திரன் நிறைவுரையாற்றி னார். மாவட்ட இணைச் செய லாளர் ஒய். சந்திரசேகரன் நன்றி கூறினார். முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் 70 வயதில் 10சதவீதம் ஓய்வூதிய உயர்வை வழங்கிட வேண்டும்.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ தியத் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்.திருமங்க லம் சுங்கச் சாவடியை உட னடியாக அகற்ற வேண்டும் மதுரை ஊமச்சிகுளம், திருப்பாலை. ஆனையூர் கோ.புதூர் போன்ற பகுதி களை இணைத்து மின்மயா னம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.