மதுரை, ஜன.10- தினக்கூலி ரூ.721 வழங்க வேண் டும். பணிநீக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மதுரை மாநகராட்சி தொழி லாளர்கள் ஜனவரி 10 செவ்வா யன்று மாநகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட பம்ப்பிங் ஸ்டேசன் பணியாளர்கள் 12 பேர் , பாதாளச் சாக்கடை பணி யாளர்கள் -5 பேர் , அனிமேட்டர் 12 பேர் மற்றும் தூய்மை தொழிலா ளர்கள் 3 பேர் உள்ளிட்ட 32 பேருக் கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். அனைத்துப்பிரிவு தினக்கூலி மற்றும் ஒப்பந்த தூய்மை தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 ( 2 ம் ) - இன்படி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் வழங்கிட உத்தரவு பிறப்பித்தது போல் மதுரை மாநகராட்சி தொழிலாளர் கள் அனைவருக்கும் தினச்சம்ப ளம் ரூ.721 வழங்க வேண்டும்.
பார்க் மஸ்தூர், அனிமேட்டர், கொசு மருந்து பணியாளர்கள், வாட்ச் மேன் மற்றும் கம்ப்யூட்டர் ஆப் ரேட்டர் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்.பயிற்சி முடித்த பகுதி சுகாதார செவிலி யர்களுக்கு பதவி உயர்வு ( SHN) வழங்க வேண்டும் . மாதாமாதம் சம்பளம் குறைத்து வழங்குவதை முறைப்படுத்தி முழுமையான ஊதி யம் பிரதி மாதம் 5 ஆம் தேதி வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மதுரை மாநக ராட்சி தொழிலாளர் சங்கம் மற்றும் மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம் சார்பில் மதுரை மாநகராட்சி மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே. மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். பொறி யியல் பிரிவு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சி. மகுடீஸ்வ ரன் முன்னிலை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியம், பொறி யியல் சங்க மாவட்ட செயலாளர் கே.கண்ணன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினர். இதில் சிஐடியு சங்க பொருளாளர் கே.கருப்பசாமி, பொறியியல் பணியாளர் சங்க பொருளாளர் கே.துரைக்கண் ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.