நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மரு.கா.ப.கார்த்திகேயன், விராட்டிபத்து கல்லுமலை குருநாத வித்யாலய சாலை ஆரம்பப் பள்ளி, சம்மட்டிபுரம் பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளி, ஆனையூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை ஆய்வு செய்தார்.