கன்னிவாடியில் 19 ஆம் நூற்றாண்டு கவ்வெட்டு கண்டுபிடிப்பு
ஒட்டன்சத்திரம், பிப்.10- ஒட்டன்சத்திரம் அருகே 19 ஆம் நூற்றாண்டு கவ்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலையம் எதிரில் உள்ள பெருமாள் கோவிலில் கல்வெட்டு உள்ள செய்தி அறிந்து, மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் ஆய்வாளர்களும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முனைவர் மு.இலட்சுமணமூர்த்தி மற்றும் வீ.அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பிறகு அவர்கள் கூறுகையில்,”இந்த கல்வெட்டு கோவில் காவலுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி தெரிவிக்கிறது. கன்னிவாடி என்ற ஊரில் பெரிய காளி கோவில் காவலுக்கு குமார நர்சிம்ம அப்பயன் என்பவரை நியமித்துள்ளார். இதற்கான செலவினங்களை கொப்பம்மா என்பவர் உபயமாக சவுமிய வருடம் மார்கழி மாதம் 12 ஆம் நாள் கொடுத்துள்ளார் என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.சுமார் 150ஆண்டுகளுக்கு முற்பட்டது”என்று தெரி வித்தனர்.
வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தேனி, பிப்.14- தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வா கத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா பொருளா ளர் மதன் குமார் தலைமை வகித்தார். தாலுகா செயலா ளர் பிரேம்குமார், நிர்வாகிகள் பெருமாள்சாமி, நாக பாண்டி ஆகியோர் பேசினர்.
புறா பிடிக்கச் சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து பலி
தேனி, பிப்.14- தேனியில் புறா பிடிப்பதற்கு சென்ற 8 ஆம் வகுப்பு மாண வன் கிணற்றில் விழுந்து பலியானான். தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (13) என்ற மாணவன் .இவர் பங்கஜம் ஹவுஸ் தெருவில் உள்ள கிணற்றில் புறா பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். நிலை தடு மாறு 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இத னைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாட்டில் மூடியை விழுங்கிய சிறுவன் பலி
காரியாபட்டி, பிப்.14- காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் மருந்து பாட் டில் மூடியை விழுங்கிய சிறுவன் மூச்சுத் திணறி உயிரி ழந்தான். விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு காந்தி நகரைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (36). இவரது மகன் முத்துமுரு கன் (5). இச்சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, மருந்து பாட்டில் மூடியை விபரம் தெரியாமல் விழுங்கியுள்ளார். இதனால், வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுதுள்ளான். எனவே, உறவினர்கள், அச்சிறு வனை, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து வமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் முத்துமுருகன் உயிரிழந்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
வாகனம் மோதி பஞ்சாலை தொழிலாளி உயிரிழப்பு
திருச்சுழி, பிப்.14- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கத்தாளம் பட்டியைச் சேர்ந்தவர் கெங்கா பிரபு(29). இவர் தனி யார் பஞ்சாலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில், மேல கண்டமங்கலம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
தேனி, பிப்.14- தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் மதிப்பிலான நகை,பணம் திருடு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டி அரசுநகர் இரண்டா வது தெருவைச் சேர்ந்த அகஸ்டின் மனைவி வனஜா (54). இவர்களது மகள் ஏற்காடு மான்போர்ட் பள்ளியில் படித்து வருகிறார். இவரைப் பார்ப்பதற்காக வனஜா கடந்த 11 ஆம் தேதி ஏற்காடு சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது வீட்டு கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பிரேஸ்லெட், வைரசெயின், தங்கடாலர், வளையல், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்ட ரூ.8.10லட்சம் மதிப்பி லான பொருட்களும், ரூ.90ஆயிரம் பணமும் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வா ளர் ராஜேஷ் விசாரித்து வருகிறார்.