பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
விருதுநகர், ஜூன் 14- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த, அதே பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன்(30) என்ற குற்றவாளிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாயன்று 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
வேலை கிடைக்காததால் இளைஞர் தற்கொலை
நத்தம், ஜூன் 14- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி யை சேர்ந்தவர் நாகராஜன்(31).இவர் கடந்த சில மாதங்க ளாக வேலை கிடைக்காத விரக்தியில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் இறந்த வரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு கானை நோய் தடுப்பூசி போட கோரிக்கை
கடமலைக்குண்டு, ஜுன்.14- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வரு கின்றனர். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கோம்பைத் தொழு, தும்மக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் அரசு கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையே கால்நடை பராமரிப்பு துறை மூலம் மாடுகளுக்கு இலவசமாக கானை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த ஒரு வருடமாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் மாடுகளுக்கு கானை நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. வழக்கமாக மழை காலங்களில் கால்நடைகளுக்கு கானை நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படும். ஆனால் தற்போது வரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப் படாத காரணத்தால் கானை நோய் பரவல் தொடங்கினால் பெரும்பாலான கால்நடைகள் நோயால் இறக்கும் அபாயம் உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு சம்பந்தப் பட்ட கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தி மாடுகளுக்கு கானை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.
சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை ஜூன் 17க்கு ஒத்திவைப்பு
மதுரை, ஜூன் 14- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணி கர்களான ஜெயராஜ்,இவரது மகன் பென்னிக்ஸ் சாத்தான் குளம் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந் தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது செவ்வாயன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதி மன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில் நடை பெற்றது. இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தின் போது கோவில்பட்டி கிழக்கு ஆய்வாளராக பணியிலிருந்த சுபே சனிடம் சாட்சிய விசாரணை நடைபெற்றது. அப்போது ஆய்வாளர் சுபேசன் ,தந்தை - மகன் இறப்பு குறித்த தகவல் வந்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது குறித்து சாட்சியம் அளித்தார் என நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களின் தரப்பி லும் சாட்சியத்திடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலை யில் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 17 ஆம் தேதி ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதி மன்ற நீதிபதி நாகலெட்சுமி உத்தரவிட்டார்.
பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி சிபிஐ நடைபயணம்
இராஜபாளையம் ,ஜூன் 14- நீர் நிலைகள், நூறுநாள் வேலை திட்டம், பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, பேண்டேஜ், ஆயத்த ஆடைகள், கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை மற்றும் நாட்டு செங்கல் உற்பத்தி போன்ற தொழில்களை பாதுகாக்கக் கோரி விருதுநகர் மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளனர். ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் கிராமத்திலிருந்து விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி லிங்கம் தலைமை யில், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன் துவக்கி வைத்தார். வத்திராயிருப்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் துவக்கி வைத்தார்.
நடிகர் ஜெயம்ரவி ஆறுதல்
மதுரை, ஜூன் 14- மதுரை மாவட்டம் நிலையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளன. செந்தில் கடந்த 10ஆண்டுகளாக ஜெயம் ரவி யின் தீவிர ரசிகராகவும், ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் செந் தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது தொழில் காரணமாக லாரியில் சென்றபோது லாரி கவிழந்த விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகரின் மறைவு குறித்து செய்தி அறிந்து திங்களன்று மாலை மதுரை நிலையூர் பகுதி யில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். செந்திலின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், செந்திலின் இரு குழந்தை களுக்குமான கல்விச்செலவை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மரம் மீது அரசுப் பேருந்து மோதி 10 பேர் படுகாயம்
திருவில்லிபுத்தூர்,ஜூன் 14- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் திருச்சியிலிருந்து ராஜ பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது பலமாக மோதியது.இதில் ஓட்டுனர் உட்பட 5 ஆண்கள் 5 பெண்கள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் காயமடந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவில்லிபுத்தூர் கிளைச் சிறைச்சாலையில் தூய்மை பணியாளராக பணிபுரியும் மதுரை யைச் சேர்ந்த பவானி ,பேரையூரைச் சேர்ந்த சந்திரா ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான அரசு பேருந்து பராமரிப்பின்றி இயக்கப்பட்ட தாலும் ஓட்டுநருக்கு நிர்வாக தரப்பில் கூடுதல் பணிச்சுமை கொடுக்கப்பட்டதாலும் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.