கஞ்சா பதுக்கி வைத்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது
கடமலைக்குண்டு, டிச.29- தேனி மாவட்டம் வருசநாடு போலீ சார் கடந்த 13ம் தேதி சிங்கராஜபுரம் அருகே பண்டாரவூத்து மலைப்பகுதியில் கஞ்சா தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். அப்போது முட்புதரில் சாக்கு பை களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் கஞ்சா பதுக்கி வைத்த உசிலம்பட்டி சேர்ந்த உதயன் (வயது 34), பண்டாரவூத்துவை சேர்ந்த ஜோதிபாசு (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உதயன், ஜோதிபாசு 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட கலெக் டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ்டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் முரளிதரன் உத்தர விட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் உள்ள உதயன், ஜோதிபாசு 2 பேரும் புதனன்று குண்டர் தடுப்பு சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை காவ லில் வைக்கப்பட்டனர்.
ஜன.7ல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்
விருதுநகர், டிச.29- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகை யில் வரும் ஜனவரி 7 அன்று சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கி ணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக கட்டிடத்தில் நடை பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.
அவ்வையார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல், டிச.29- பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2021-2022ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 8.3.2022 உலக மகளிர் தின விழாவில் தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு ரொக்க பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 5.1.2022-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மீது ரூ.78.70 லட்சம் மோசடி புகார் 7 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன் மேலும் பல வழக்குகள் தொடர வாய்ப்பு
விருதுநகர், டிச.29- ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீது ரூ.78.70 லட்சம் மோசடி செய்ததாக 7 பேர் புகார் மனு அனுப்பியிருந்தனர். அவர்களை விசார ணைக்கு நேரில் வரும்படி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள னர். விசாரணை முடிவில் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மேலும் பல வழக்குகள் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் தனது உறவி னருக்கு விருதுநகர் ஆவினில் கிளை மேலா ளர் வேலை வாங்கித் தரக்கோரி ரூ.30 லட்சத்தை அதிமுக வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பியிடம் வழங்கினாராம். அவர் வேலை வாங்கித் தரவில்லை. எனவே, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த நவம்பர் 15ல் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையில் விஜய நல்லதம்பி, முருகன், இளங்கோ, பரமசிவம் ஆகியோர் மூலம் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரது உதவி யாளர்கள் பாபுராஜ், பலராமன், ரவிச்சந்தி ரன் உள்ளிட்டோர் ரூ.3.10 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன்பேரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 4 பேர் மீது 5 பிரிவு களில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். டிசம்பர் 17ல் மனு தள்ளுபடியானது. பின்பு, அவர் தலைமறைவானார். எனவே, அவரை பிடிக்க 8 தனிப்படை கள் அமைக்கப்பட்டன. மேலும், வெளி நாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவரது வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டன. இந்தநிலையில், ராஜேந்திரபாலாஜி யுடன் தொடர்பில் இருந்ததாக அதிமுக வைச் சேர்ந்த விக்னேஷ்வரன், ஏழுமலை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் மனோகரிடமும் மற்றும் இணை யதளம் மூலம் என 7 புகார் மனுக்கள் வந்தன. அதில், ராஜேந்திரபாலாஜி வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தார் என கூறப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.78.70 லட்சமா கும். இந்நிலையில், புகார் செய்த 7 பேருக் கும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம் மன் அனுப்பி வைத்துள்ளனர். அதில் விசா ரணைக்கு நேரில் வருமாறு தெரிவித்துள்ள னர். விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண் மையாகும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் பல மோசடி வழக்குகள் தொடரப்படும் என காவல்துறை யினர் தெரிவித்து வருகின்றனர்.