districts

மதுரை முக்கிய செய்திகள்

சாப்பாட்டில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி 

சின்னாளப்பட்டி, டிச.7- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டி யார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி பேரூராட்சி  வீரபுடையான்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு புதனன்று  மதிய உணவு  உண்ணும் போது மாணவ மாணவிகள் சாப்பாட்டில்  பல்லி இருந்ததால்  25 மாணவ மாணவியர்கள் கன்னி வாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.  இப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்த நிலையில்  இருந்ததால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிய  கட்டிடம் கட்டுவதற்காக வகுப்பறைகள் இடிக்கப்பட்டன. இதனை அடுத்து திறந்தவெளி கலையரங்கத்தில் மாண வர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மழை நேரங்களில் அருகில் உள்ள கோவில்களில் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. சத்துணவு கூடம்  மராமத்து செய்யப்  பட்டு சிமெண்ட் சீட் சேதம் அடைந்த நிலையிலேயே  உள்ளது.  கட்டிடத்தில் தண்ணீர் வசதியோ மின்விளக்குகள் வசதி கள் எதுவும் இல்லாததால் அக்கட்டிடத்தில்  மதிய உணவு சமைக்கும் பொழுது சமைத்த உணவில் பல்லி விழுந்தது.  ஒரு மாணவியின் சாப்பாட்டு தட்டில் பல்லி இருந்ததைக் கண்ட சத்துணவு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு தக வல் கொடுத்தனர். இதையடுத்து சாப்பிட்ட 25 மாணவர்  களும் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் பல்லி விழுந்த உணவை ஆய்வுக்காக எடுத்துச் சென்ற னர்.  மேலும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும்  பெற்றோர்கள் கூறுகையில், சமையலறையில் மின் விளக்கு வசதி, தண்ணீர் வசதி எதுவுமே இல்லை.  புதிய  பள்ளி கட்டிடம் உடனடியாக கட்டித் தர வேண்டும்.இல்லை யெனில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்தனர். கன்னிவாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை. அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினருக்கு பெற் றோர்கள்  பாராட்டு தெரிவித்தனர்.   ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி தலைமை யில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, சத்துணவு மேலா ளர் சிவசுப்ரமணியம், பேரூராட்சி மன்ற தலைவர் தன லெட்சுமி சண்முகம், துணை தலைவர் கீதா முருகா னந்தம் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்வை யிட்டதோடு அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த னர். மேலும் குழந்தைகளுக்கு பழங்கள், ரொட்டிகளை வழங்கினர்.

ஒரு டன் ரேசன் அரிசி கடத்தியவர் கைது

விருதுநகர், டிச.7- விருதுநகர் அருகே சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் வந்த சரக்கு வாக னத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 40 கிலோ வீதம் 24 மூட்டைகளில் 960 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்த, போலீசார் வாகனத்தை ஓட்டி வந்தவ ரிடம் விசாரணை மேற்கொண்டனர் அவர் மதுரை, காம ராஜர் சாலைப் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (50)  என்பது தெரிய வந்தது. பின்பு, அவரை கைது செய்தோடு, வாகனம் மற்றும் அரிசியை போலீசார் பறிமுதல் செய்த னர்.

கட்டண கழிப்பறையில் கஞ்சா தேனியில் வாலிபர் கைது

தேனி, டிச.7-  தேனி பேருந்து நிலைய கட்டண கழிப்பறையில் விற்ப னைக்கு கஞ்சா வைத்திருந்த வாலிபரை கைது செய்த  காவல்துறையினர்  அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். தேனி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தேனி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்  துறையினர் சோதனை செய்தனர் .அப்போது பட்டுக் கோட்டையை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் மணிகண்டன் (22),ஆண்டிபட்டி பூக்கார தெருவைச் சேர்ந்த ஹரிகர சுதன் ஆகியோர்  விற்பனைக்கு 2 கிலோ கஞ்சா வைத்தி ருந்தது தெரியவந்தது. விசாரணையின் போது ஹரிகர சுதன் தப்பிவிட்டார். மணிகண்டனை விசாரணை செய்ததில் அல்லிநகரத்தை சேர்ந்த கோபிநாத் என்ற குருட்டு கோபியிடம் வாங்கிய தாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரை தேடி வருகிறார்கள்.

போடி -தேனி  அகல ரயில் பாதையில்  நாளை நவீன ஆய்வு ரயில் சோதனை

தேனி, டிச.7- போடி -தேனி அகல ரயில் பாதையில் வெள்ளிக்கிழமையன்று நவீன ஆய்வு  ரயிலை கொண்டு சோதனை மேற்கொள் ளப்பட உள்ளது. போடி -தேனி  அகல ரயில் பாதை பணி கள் முடிவடைந்து கடந்த 2 ஆம் தேதி ரயில்  இன்ஜினை அதிவேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.120 கி மீ. வேகத்தில் இயக்கப்பட்ட இன்ஜின் 15 கிமீ  தூரத்தை 9 நிமிடங்கள் 20 நொடிகளில் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை (டிசம்பர் 9) நவீன ஆய்வு ரயிலை அதிவேகத்தில் இயக்கி சோதனை நடைபெற உள்ளது. இன்ஜினுடன் இந்த நவீன ஆய்வு ரயில் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். ரயில் அதிவேகத்தில் செல்லும் போது தண்டவா ளத்தில் ஏற்படும் மாறுபட்ட அதிர்வுகள், நுண்ணிய குறைபாடுகள் போன்றவை இதில் உள்ள கணினியில் பதிவாகும். பின்பு  இக்குறைபாடுகள் சரி செய்யப்பட்டு தண்ட வாளங்கள் சீரமைக்கப்படும். இது குறித்து ரயில்வே துறை அதிகாரி கள் கூறுகையில், டிசம்பர் 9 ஆம் தேதி நவீன ஆய்வு ரயிலை 120 கிமீ,வேகத்தில் இயக்கி  சோதனை நடத்தப்பட உள்ளது.ஆகவே அன்று மதியம் 12 மணிமுதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று தெரிவித்தனர்.

தமிழக முதல்வர்  நாளை  மதுரை வருகை

மதுரை, டிச.7- தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் டிசம்பர் 9 அன்று  மதுரை வருகிறார்.  அன்று காலையில் மாநகராட்சி பொன் விழா நுழைவு  வாயில் திறப்பு விழாவிலும் பெருங்குடியில் நடை பெறும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிலும் முதல்வர் பங்கேற்கிறார்.  வியாழக்கிழமை காலை தென்காசியிலிருந்து புறப் பட்டு  இரவு மதுரை வந்தடைகிறார். வெள்ளிக்கிழமை மதுரை விழாக்களில் பங்கேற்ற பின்னர் விமானம் மூலம் சென்னைக்குச் செல்கிறார்.

சாலையோர பள்ளத்தில் விழுந்து மளிகை கடைக்காரர் பலி

வேடசந்தூர், டிச.8-  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர்  ஊராட்சி ராஜபுரத்தில் மளிகை மற்றும் டீக்கடை வைத்துள்ளவர் சுப்பிரமணி(வயது 48). இவர் செவ்வா யன்று இரவு அருகே உள்ள கருதனம்பட்டிக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கோவிலூர் -ஆர்.புதுக்கோட்டை சாலையில் ஆர்.பி. பள்ளபட்டி அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் சென்று விழுந்தது. அதை ஓட்டிச்சென்ற சுப்பிரமணியும் உடன் பள்ளத்தில் விழுந்து  இறந்தார். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உசிலம்பட்டி அருகே பிறந்து  15 நாட்களே ஆன பெண்சிசு பலி

மதுரை, டிச.7- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண வாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் - ரெஜினா தம்பதி.  இவர்களுக்கு  ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொட்டப்ப நாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரெஜினா விற்கு இரண்டாவதாக பெண்  குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து தாய் வீடான ஆரியபட்டிக்கு  தாய் மற்றும் சேய் நலமுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் டிசம்பர் 7 அன்று வீட்டில் குழந்தை பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம டைந்தாக கூறப்படுகிறது இதனையடுத்து 108 ஆம்பு லன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்த நிலையில் மருத்துவ மனையில் பச்சிளம் குழந்தையை பரிசோதித்த மருத்து வர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ள னர். விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல்துறை யினர்  குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய் விற்காக அனுப்பு வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் மோதி மூதாட்டி பலி

திருவில்லிபுத்தூர், டிச.7-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் காந்தி  நகரில் வசிப்பவர் பொன்னையா மனைவி பாண்டி யம்மாள் (வயது 60). இவரது மகள் காளியம்மாள் திருவா ரூர் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார்.மகளைப்  பார்ப்பதற்காக  பாண்டியம்மாள் திருவாரூருக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பினார். கிருஷ்ணன்கோவில் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து வரும்போது அவ்வழியே தட்டாங்குளம் பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் (வயது 29) என்பவர் ஓட்டி வந்த கார் பாண்டி யம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார். இச்சம்ப வம் குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை பாஜகவிடமிருந்து பாதுகாக்க வேண்டும்

ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

தூத்துக்குடி, டிச. 7 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்பேத் கர் நினைவு தினத்தை யொட்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே யுள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் கரிசல் இலக்கி யத்தின் தந்தை கி.ராஜ நாராயணன் மணிமண்ட பத்தை பார்வையிட்டார். செய்தியாளர்களை சந்தித்த அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறிய தாவது: பாஜக அரசால் அரசி யல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.  அரசியல் அமைப்புச் சட்டம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் அரசி யல் சட்டத்தை ஏற்று அதை முறையாக அமலாக்கக் கூடிய நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சி ஆட்சிக்கு வந் தால்தான் அச்சட்டம் நிலைத்து நிற்கும் என்றும், அரசியலமைப்பு சட்டத்தை ஏற்காதவர்கள் ஆட்சிக்கு வந்தால் அச்சட்டம் கெட்டு விடும் என்று அம்பேத்கர் கூறி யுள்ளார். அது தான் தற்பொ ழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது.  2014 ஆம் ஆண்டு அதிகா ரத்திற்கு வந்த ஒன்றிய பாஜக அரசால் அரசியல் சட்டத் திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்திய அரசியல மைப்புச் சட்டம் மதச்சார்பு அற்றது. மதச்சார்பின்மை, ஜனநாயகம் , கூட்டாட்சி , சுய சார்பு பொருளாதார கொள்கை இவையெல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள். இதனை பாஜக அரசு தகர்த்தெறிந்து வரு கிறது. மதச்சார்பற்ற இந்தி யாவை மத சார்பு இந்தியா வாக பாஜக அரசு மாற்றி வருகிறது. ஜனநாயகத்தை ஒடுக்கி வருகிறது. கூட் டாட்சி கோட்பாட்டை சீர் குலைத்து வருகிறது. இம் மாதிரியான சூழலில் அரசி யல் அமைப்புச் சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

கொடிநாள் நிதி  ரூ 80.02 லட்சம் இலக்கு  தேனி ஆட்சியர் தகவல் 

தேனி, டிச.7- தேனி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக ரூ 80.02 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத் துறையின் சார்பில் முப்படை வீரர் கொடி நாளினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி யில், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர் சார்ந்த 11 வாரிசுதாரர்களுக்கு ரூ.3.73 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெறு வதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் , மாவட்டத்திற்கு படைவீரர் கொடிநாள்  வசூலுக்காக  தமி ழக அரசால் ரூ.75.75 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்ட தில் ரூ.75.75 லட்சம் வசூல் எய்தப்பட்டு, நூறு சதவிகி தம் இலக்கு அடையப்பட்டுள்ளது. இந்த சாதனை அனைத்துத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பினால் சாத்தியமானது. இந்த ஆண்டு இலக்காக தேனி மாவட் டத்திற்கு ரூ.80.02 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார் . இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலவலர் தி.சுப்ர மணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெக வீரபாண்டியன், முன்னாள் படை வீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் அன்னபுஷ்பம், முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.