மதுரையில் 3 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு
மதுரை, அக்.26- மருதுபாண்டியர் நினைவு தினம், பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 27, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் எப்எல்1/ எப்எல்2/ எப்எல்3/ எப்எல்3A/ எப்எல்4A மற்றும் எப்எல்11 ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங் கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகம், படை வீரர் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
மேலும் இந்த நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்க அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலை திட்ட மேற்பார்வையாளரின் கணவரை தாக்கிய ஊராட்சி செயலர் கைது
இராஜபாளையம் அருகே ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் ரவிசேகர். இவரது மனைவி புவனா என்ற புலியூ ரான். புவனா பிள்ளையார்குளம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் தலையிட்டு ரவி சேகரை தாக்கி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தனது மகன்களை பார்ப்பதற்காக ஊருக்கு வந்த ரவிசேகரை, ஊராட்சி செயலர் தாக்கி யுள்ளார். இதுகுறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஊராட்சி செயலர் தங்கபாண்டி யனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே, காந்தி ஜெயந்தி அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், விவ சாயியை காலால் எட்டி உதைத்த சம்பவம் தமிழகம் முழு வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சிறுமி தற்கொலை
நத்தம், அக்.26- திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). ஓட்டல் தொழிலாளி. இவ ரது மகள் தர்ஷினிபிரியா (16). இவர் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரு கிறார்.
இந்நிலையில், புதனன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் தொழிலாளி பலி
தேனி, அக்.26- போடி அருகே சிலமலை மணியம்பட்டியில் வசிப்ப வர் நாகராஜ் மகன் செல்வக்குமார் (32). கட்டடத் தொழிலாளியான இவர் இரு சக்கர வாகனத்தில் சிலமலை நடுக்காலனி தனியார் வங்கி அருகே வந்துள்ளார். அப்போது தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யர் முத்துராமலிங்கம் மகன் ஆனந்த் (20) தனது இருசக்கர வாகனத்தில் கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அறிவுமணி மகன் ரஞ்சித் (18) என்பவரை ஏற்றிக் கொண்டு தேவாரம் சாலையில் சென்றுள்ளார்.
சிலமலை தனியார் வங்கி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்வக்குமார், ஆனந்த், ரஞ்சித் ஆகிய 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த தனியார் பார்சல் நிறுவன லாரி செல்வக்குமார் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்த், ரஞ்சித் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து போடி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் மதுரை அச்சம்பத்து புதுக்குடியைச் சேர்ந்த கண்ணனிடம் (43) விசாரித்து வரு கின்றனர்.
பாழடைந்த கிணற்றில் விழுந்து மூதாட்டி பலி
போடி அருகே சில்லமரத்துப்பட்டி பி.டி.ராஜன் தெரு வைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி சீனியம்மாள் (80). இவர் கண் பார்வை சரியாக தெரியாததால் கம்பு ஊன்றி நடந்து வந்துள்ளார்.
வியாழக்கிழமை காலை கடன் கழிப்பதற்காக சில்ல மரத்துப்பட்டி தனியார் பாலிடெக்னிக் சாலையில் சென்றுள்ளார். பார்வை தெரியாமல் இப்பகுதியில் முத்து ராஜ் என்பவரின் பாழடைந்த கிணறு பக்கம் சென்றவர் அங்கு தவறி விழுந்துவிட்டார்.
காலையில் சென்றவரை காணவில்லை என இவ ரின் மகன் முருகன் (62) உறவினர்களுடன் தேடியபோது கிணற்றில் சீனியம்மாள் விழுந்தது தெரியவந்தது. தீய ணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர்.
மாமனாரின் ரூ.50 லட்சம், நகைகளை அபகரித்த இன்ஸ்பெக்டர் மருமகன்
தேனி, அக்.26- கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த வர் பால்சாமி மகன் நேதாஜி (66). இவர் வியாழனன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அதில், 66 வயதான மூத்த குடிமகனாக எனக்கு முரு கேஸ்வரி, சரிதா என்ற இரு மகள்கள் உள்ளனர். மனைவி இறந்து விட்ட நிலையில் காமயகவுண்டன்பட்டியில் தனி யாக வசித்து வந்தேன்.
இந்நிலையில் மூத்த மகள் முருகேஸ்வரியின் கணவர் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சங்கரேஸ்வரன் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்னிடம் நேரிலும், போனிலும் வந்து நன்றாக கவனித்து கொள்வதாக கூறி மூளை சலவை செய்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் படிப்படியாக நம்பிக்கை மோசடி செய்து வீட்டில் வைத்து அடைத்து ரூ.50 லட்சத்து 80 ஆயிரம், 21 பவுன் நகை, வங்கி பாஸ்புக், சொத்து ஆவணம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை அபகரித்து கொண்ட தாகவும், கிழிந்த சட்டையும் வீடு திரும்பியதாகவும், பணம் நகைகளை மீட்டு தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.