districts

img

பொதுத்துறைகளைப் பாதுகாக்க எல்ஐசி ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

மதுரை, மே 14-  மதுரை கோட்ட எல்ஐசி  பென்சனர் சங்கத்தின் 26- ஆவது  மாநாடு தலைவர் இரா. ஆறுமுகம் தலைமையில்  நடை பெற்றது ஜி.அருணா  அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார். செயலாளர் சி.சந்திரசேகரன் வேலை அறிக்கையையும்  பொருளாளர் ஜெ.கோபாலகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். பொது இன்ஷ்சுரன்ஸ் ஒய்வூதியர் சங்கம் சார்பில் ராமநாராயணன், எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள்  சார்பில்  இ.சங்கசுப்ரமணியன், தேசிய களப்பணியாளர் கூட்ட மைப்பு சார்பில் எம்.அருண்குமார், காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கத் தலைவர் ந.சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்ட மைப்பின்  முன்னாள் துணைத் தலைவர் க.சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார்.  மாநாட்டில் பொதுத் துறைகளைப் பாதுகாக்க வேண்டும், பென்சன் மற்றும் குடும்ப பென்சனை உயர்த்தி வழங்க வேண்டும்.  எல்ஐசி பங்கு விலக்கலை திரும்பப் பெற வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பொருளாளர் டி.கே. சேதுராமன் நன்றி  கூறினார்.