மதுரை, நவ.28- ஆயுள்காப்பீட்டுக்கழக முகவர்கள் சங்கத்தினர் (லிகாய்) சார்பில் மதுரை நகர் கிளை-I, கிளை- 4-இல் திங்களன்று நேரடி இன்சூ ரன்ஸ் விற்பனையை கை விட வேண்டும், ‘பீமா சுகம்’ இன்சூரன்ஸ் செயலியை நடைமுறைப்படுத்தும் முயற் சியை மோடி அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சி. ரங்கநாதன் தலைமை வகித்தார். ஆர்.ஆர்.ஜெனார்தனன், ஜெ.கல்பனா, ஜி.கிருஷ்ண மூர்த்தி, ஆர்.விஜி, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின், லிகாய் தென்மண் டல செயல் தலைவர் எம். செல்வராஜ், கோட்டச் செய லாளர் கே.மாரி, ஜி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.