தேனி, அக்.7- பாலஸ்தீனம் மீதான இனப் படு கொலையை தடுத்து நிறுத்த வேண் டும்; இஸ்ரேல் நாட்டிற்கு இந்திய தனியார் நிறுவனங்கள் தயா ரிக்கும் ஆயுதங்களை அனுப்பி வைக்கும் பாஜகவின் மோடி அரசை கண்டித்து தேனியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப பாட்டம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை தலை மை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் கே. ராஜப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கண்ணன், சிபிஐ சார்பில் மாவட்ட துணைச் செயலா ளர் வே.பரமேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகி யோர் பேசினர். சிபிஐ மாவட்டச் செயலாளர் கி.பெருமாள் ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் டி.வெங்கடேசன், சி.முருகன், ஜி.எம்.நாகராஜன், சி.முனீஸ்வ ரன், இடைக்கமிட்டி செயலாளர்கள் கே.எஸ்.ஆறுமுகம், கே.ஆர்.லெனின், எம்.வி.முருகன், எஸ்.செல்வம், எஸ்.லட்சுமணன், சிபிஐ சார்பில் பாண்டி, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டனர். திண்டுக்கல் திண்டுக்கல் பேகம்பூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் திண்டுக்கல் மக்களவை உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். சிபிஐ நகரச் செயலா ளர் பி.கிருஷ்ணசாமி, சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் முரு கேசன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் பி.செல்வராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.பி.மணிகண்டன், சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சியின் மாவட்டச் செயலாளர் சுப்புராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிபிஎம் நகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பேசிய தாவது: இன்றைக்கு முழு பாலஸ்தீனத் தையும் விழுங்கக்கூடிய இஸ்ரே லின் போருக்கு எதிராகத் தான் பாலஸ்தீனர்கள் போராடி வரு கிறார்கள். தங்களுடைய சொந்த மண் பறிக்கப்படுவதற்கு எதிராக பாலஸ்தீன் மக்கள் குரல் எழுப்பு கிறார்கள். இந்த மக்களுக்கு ஆதர வாக ஹமாஸ் அமைப்பு போராடு கிறது. இது பாலஸ்தீன மக்களின் உரிமையை மீட்கக்கூடிய போராட் டம். அவர்களுடைய அந்த உரி மைக்கான போராட்டத்திற்கு ஆதர வாகத்தான் உலகம் முழுவதும் போராடி வருகிறார்கள். ஆக்கிர மிப்பை உறுதிப்படுத்துவதற்காக இஸ்ரேல் போர் நடத்துகிறது. இதற்கு பின்னால் அமெரிக்க ஏகாதி பத்தியம் உள்ளது. இத்தகைய நட வடிக்கையில் ஈடுபடும் இஸ்ரே லுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கி றது. ட்ரோன்களை, ஆயுதங்களை கடல்வழியை பயன்படுத்தி சப்ளை செய்கிறது. அமெரிக்கா வைத் தான் இந்திய அரசும் பின் பற்றுகிறது. இந்த பிரச்சனையில் ஐ.நா.சபை தலையிட வேண்டும். இனியும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுமானால் இந் திய மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.