districts

மதுரை முக்கிய செய்திகள்

நத்தம் அருகே தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலி

நத்தம், ஜன.4- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் சங்கர்,ஓட்டுநர். அதே  பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(19), பேக்கரி தொழி லாளி. இவர்கள் இருவரும் திண்டுக்கல்லுக்கு இருசக்கர  வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வாகனத்தை சங்கர் ஓட்டினார். எர்ரமநாயக்கன்பட்டி பிரிவில் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில்  இருவரும் தூக்கிவீசப்பட்டனர். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலே பலி யானார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார்  இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம டைந்த சங்கர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்  ஆய்வாளர் தங்கமுனியசாமி வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

ஓடையில் அனுமதியின்றி  மணல் அள்ளியவர் கைது 

திருவில்லிபுத்தூர், ஜன.4-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே திரு வண்ணாமலை கிரிவலப் பாதை அருகே ஓடையில் அரசு  அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக திருவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், மணல் அள்ளிக்கொண்டிருந்த மங்காபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன், ராகவன் கருப்பசாமி, கார்த்தி தவசி உட்பட  ஆறு பேரை பிடித்தனர்.  வழக்கு பதிந்து ராகவன் என்ப வரை மட்டும் கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி. நீதிமன்ற காவலில் அடைத்தனர்.  மற்ற வர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தூரில் சமையல் எரிவாயு  கசிந்து விபத்து: முதியவர்  பலி

சாத்தூர், ஜன.4- சாத்தூரில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார். சாத்தூரைச் சேர்ந்தவர் சிவசாமி (61). இவர் வீட்டில்   தனியாக வசித்து வந்த நிலையில் சமையல் எரிவாயு உரு ளையில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் சிவசாமி  அடுப்பை பற்ற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, அங்கு  தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிவசாமி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை  

திருவில்லிபுத்தூர், ஜன.4- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே  காரியாபட்டி தாலுகா அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வர்  கோபால் (வயது 26). திருமணமான இவருக்கு குழந்தை கள் உள்ளன.  கடந்த ஆண்டில் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு கோபால் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் தந்த புகாரின் பெயரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தனர்.  திருல்லிபுத்தூரில் உள்ள சிறார் பாலியல் குற்றத் டுப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கினை விசாரித்த நீதிபதி கே.பூர்ண ஜெய ஆனந்த்  குற்றம் சாட்டப்பட்ட கோபாலுக்கு 5 வருடம் சிறை தண்ட னையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித் தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு  குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.கலா ஆஜரானார்.

சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

மதுரை, ஜன.4- சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அபராதம்  விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி தெரிவித்துள் ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலை களில் மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. மேலும்  விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மாநகராட்சியின்  மூலமாக அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர் ளுக்கு மாடுகளை சாலைகளில் விடுவதை தவிர்க்க முறை யாக எச்சரிக்கை செய்யப்பட்டும் வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சி மற்றும் புளு கிராஸ் அமைப்பின் மூல மாக தகுதி வாய்ந்த மாடுபிடி வீரர்களை கொண்டு குழு  அமைக்கப்பட்டு சாலைகளில் மாடுகளை விடும் உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்  படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை  சுமார் 364 மாடுகள் பிடிக்கப்பட்டு மொத்தம் ரூ.5,45,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்ப வர்கள் தங்களுடைய சொந்த இடத்தில் வைத்து மாடு களை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடை யூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப் பட்டு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை  மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஜன.9 இல் தொழிற்பழகுநர்  பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 

மதுரை, ஜன.4- மதுரை மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாண வர், மாணவியர்களுக்கு வருகின்ற ஜனவரி 9 அன்று  காலை 9.30 மணி முதல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்  மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூன்று மாவடி, மதுரை யில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில்  கலந்து கொள்ளவுள்ள மாணவர்கள் தங்களது கல்வி தேர்ச்சி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,  சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து  கொள்ளலாம்.  இம்முகாமில் கலந்து கொண்டு தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ.7,700 முதல் ரூ. 12 ஆயிரம் வரை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும். தொழிற்பழகுநர் பயிற்சிக்கான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள  மூன்று மாவடியில் செயல்பட்டு வரும் உதவி இயக்குநர்,  மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண். 9499055748-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவினில் 236 பேரின் பணி நியமனம் ரத்து உரிய விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திடுக!

சிஐடியு வலியுறுத்தல் மதுரை, ஜன.4- முறைகேடு புகாரால் கடந்த அதிமுக ஆட்சி யில் ஆவின் நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட 236 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து, பால்வளத்துறை ஆணையர் அதிரடி உத்தர விட்டுள்ளார். மதுரையில் 47 பேர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கூட்டுறவு சங்க ஊழி யர் சங்கம் (சிஐடியு) மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் இரா. லெனின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆவின் நிர்வாகங்களில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்றவைகளில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் ஜனவரி 4 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி ஊட கங்கள் மூலமாக வெளிவந்துள்ளது.பணி நிய மனம், பதவி உயர்வில் மிகப்பெரும் ஊழல்  நடந்துள்ளது என்று கூறி சிஐடியு தமிழ்நாடு கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் கடந்த காலங்  களில் தொடர்ந்து சுட்டிக்காட்டி போராட்டங் கள் நடத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சி யருக்கும்,பால்வளத்துறை ஆணைய ருக்கும், மதுரை ஆவின் பொதுமேலாள ருக்கும் மனுக்களும் கொடுத்து வந்துள்ளோம். சிஐடியு சுட்டிக்காட்டியது எந்தளவிற்கு சரியா னது என்பது நடைபெற்றுள்ள இந்த முறை கேடுகள் சாட்சியமாக உள்ளது. பணி நியமனம் மற்றும் பதவி உயர்வில் முறைகேட்டுப் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் தகுதியானவர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உரிய விசாரணை மேற் கொண்டு பணி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.