districts

img

சிபிஎம் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளராக கே.பி.மார்க்ஸ் தேர்வு

மயிலாடுதுறை,  செப். 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ வில் ஒன்றிய 11 வது மாநாடு  தலைமைக் குழு உறுப்பி னர்கள் எஸ்.அன்பழகன், டி. கண்ணகி, ஜி.கருணாநிதி   ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை எஸ்.சுந்தரே சன் ஏற்றிவைத்தார்.                                 மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.மாரியப்பன் மாநாட்டை  துவக்கி வைத்து உரையாற்றி னார்.  மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தேர்வு செய்யப் பட்ட புதிய செயலாளரை  அறிவித்து நிறைவுரையாற்றி னார். 9 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்பட்டு புதிய செயலாளராக கே. பி.மார்க்ஸ் தேர்வு செய்யப் பட்டார்.  முக்கிய பாசன வாய்க்கா லான சத்தியவானன் வாய்க் காலில் மயிலாடுதுறை பாதா ளச் சாக்கடை கழிவுகள் தொடர்ந்து திறந்து விடப்படு வதால் தொற்று நோய்கள் ஏற்பட்டு மக்கள் இன்னல்க ளுக்கு ஆளாகி வரு கின்றனர். இதில் உடனடி யாக நடவடிக்கை எடுத்து  நிரந்த தீர்வை ஏற்படுத்த  வேண்டும். செம்பனார்கோ வில், ஆக்கூர் பகுதிகளில் பொதுக்கழிப்பறை வசதி களை ஏற்படுத்தித் தர வேண் டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு அரங்கில் திரிபுரா நிதிக்காக பிரதிநிதிகள் ஆர்வமாய் நிதியளித்தனர். நிறைவாக ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணி யன் நன்றி கூறினார்

;