districts

img

நிலக்கோட்டை அருகே கிடா முட்டு விழா

சின்னாளப்பட்டி, மார்ச் 18- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யை அடுத்த, அம்மையநாயக்கனூரில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் பிறந்தநாள் விழாக்களை முன்னிட்டு  முதல்முறையாக கிடா முட்டு விழா நடைபெற்றது.  வீர விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் கிடா வளர்ப்போர் சார்பில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மற்றும்  கால்நடைத்துறையினர் முன்னிலையில், உரிய அனுமதியுடன் கிடா முட்டு விழா  நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் எஸ்.எம்.பாண்டி தலைமை வகித்தார், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன்,அம்மையநாயக்க னூர் திமுக பேரூர் கழகச்செயலாளர் விஜ யக்குமார், திண்டுக்கல் மாமன்ற உறுப்பி னர் ஹசினா காஜாமைதீன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சவுக் கத்அலி வரவேற்றார்.  திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை,  தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 106 கிடாய்கள் கலந்து கொண்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் 6 மற்றும்  8 கிடா பல் என இரண்டு வகை களாக  நடந்த போட்டியில், 60 முட்டுக்கள் தொடர்ந்து முட்டும் கிடாய்கள் வெற்றி பெற்றதாகவும், அதில் சோர்வடைந்து பின்வாங்கும் கிடாய்கள் தோற்றதாகவும் அறிவித்தனர் . வெற்றி பெற்ற கிடாக்களின் உரிமை யாளர்களுக்கு, சைக்கிள் கட்டில், டேபிள், சேர், கேஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.