திருத்துறைப்பூண்டி, அக்.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டி நகர குழுவின் 9-வது மாநாடு தோழர் கே.பசுபதி, பெரு மாள் நினைவரங்கம் காமாட்சி மண்டபத்தில் நடைபெற்றது. நகர குழு உறுப்பினர்கள் கே.கோபு, ஜே.பாப்பம்மாள் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி துவக்க உரையாற்றி னார். நிறைவாக மாநாட்டை வாழ்த்தி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் நிறைவு செய்தார். 12 பேர் கொண்ட நகர குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் நகர குழு செயலாள ராக கே.ஜி.ரகுராமன் தேர்வு செய்யப்பட்டார். நகரப் பகுதிகளில் மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடிவதற்கு பாதாள சாக்கடை திட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். நகர்ப் பகுதிகளில் தொடரும் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்கு திருத்துறைப்பூண்டி சுற்றுவட்ட பாதை பணியை உடனடியாக துவங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.