கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அங்கீரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் காரவிளை சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கொல்லங்கோடு நகராட்சிக்கு அனுப்பி வைக்கும் பணியினை பிப்.9 புதனன்று நேரில் பார்வையிட்டார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.