சின்னாளபட்டி, மார்ச் 24- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சி முதல் கூட்டம் பேரூராட்சிக் கூட்டரங்கில் நடைபெற்றது. செயல் அலு வலர் யுவராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் எஸ். மணிமாலதி பேசு கையில், கன்னிவாடிப் பேரூராட்சியில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது .பேருராட்சியின் அருகில் உள்ள கழிப் பறை நிறைந்து கீழே செல்லும் அவல நிலை உள்ளது. பல இடங்களில் இதே நிலைமை உள்ளது. காவல் நிலையம் எதிரே உள்ள கழிப்பறையைக் கட்டணம் இல்லா கழிப்பறையாக மாற்ற வேண் டும். அவ்வழியாக பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் ,வயதான பெரிய வர்கள் உள்ளிட்டோரால் பணம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது . அதனால் கன்னிவாடிப் பேருராட்சியில் உள்ள கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இதற்கு ஆதரவாக அதிமுக கவுன் சிலர் மோகனும் ஒரு சில திமுக கவுன்சிலரும் சிபிஎம் கவுன்சிலரின் கோரிக்கையை தீர்மானமாக நிறை வேற்றக் கோரினர். இதற்கு தலைவர், முத லில் கட்டண கழிப்பறையாக மாற்ற பார்ப்போம். அதற்கு பின் பரிசீலிப்போம் என்றார் .1 ஆவது வார்டில் சாலை, தெருவிளக்கு வசதி வேண்டும் என சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை எழுப்பி னார். பரிசீலிக்கபடும் என்று தலைவர் பதி லளித்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் சக்தி வேல் கூறுகையில், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் புதிதாக வந்த கவுன் சிலர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க வேண்டும் .1 ஆவது வார்டில் நூற்றுக் கும் மேற்பட்ட வீடுகளில் பேரூராட்சி சார்பாக வரி வசூல் செய்யவில்லை. அதை உடனடியாக செய்ய நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.