districts

img

சிபிஎம் மணிகண்டம் ஒன்றியச் செயலாளராக கே.தங்கராஜ் தேர்வு

திருச்சிராப்பள்ளி, செப்.26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மணிகண்டம் ஒன்றி யக் குழுவின் 10-வது மாநாடு  ஞாயிறன்று இனாம்குளத் தூர் சமுதாய கூடத்தில் நடந் தது. மாநாட்டிற்கு முருகே சன், பாக்கியம், அக்பால் அலி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ரெங்கராஜன் துவக்கி  வைத்தார். இனாம்குளத் தூர் ஆவாரங்காட்டில் உள்ள  ரயில்வே கேட்சாலையை போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டும்.  மின்தடையினால் ஏற்படும்  அசம்பாவிதங்களை தவி ர்க்க அரசு மருத்துவமனை பகுதிகளில் உள்ள மின்கே பிள்களை உடனே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  மாநாட்டில் மணிகண்டம்  ஒன்றியச் செயலாளராக  கே.தங்கராஜ் தேர்வு செய்யப் பட்டார். 9 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்பட் டது. முடிவில் ஏழுமலை நன்றி கூறினார்.

;