districts

செப்.27, 28, 29 தேதிகளில் கிரயப் பத்திரம் வழங்கல்

திருவாரூர், செப்.20- தஞ்சாவூர் வீட்டுவசதி பிரிவின் கீழ் செயல்படுத்தப்பட்ட மன்னார்குடி மற்றும் திருவாரூர் ஆகிய திட்டப் பகுதிகளில் வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று முழு தொகையும் செலுத்தி இதுவரை கிரயப்பத்திரம் பெறாத  ஒதுக்கீடுதாரர்களும், அரசுகடன், வங்கிகடன் மூலம் பெற்று முழு தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்களும் இவ்வலுவலகத்தால் கிரயப்பத்திரம் வழங்கும் “சிறப்பு நிகழ்வு” செப்.27,28,29 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. ஆவணங்கள் அனைத்தையும் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து கிரயப்பத்திர த்தை உடனடியாக பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்  மேலாளர் (விற்பனை மற்றும் சேவை), செயற் பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் வீட்டுவசதி பிரிவு, தஞ்சாவூர் அலுவலக  தொலைபேசி எண்: 04362-227066 முகவரியில்  தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் வீட்டு  வசதி பிரிவு, செயற்பொறியாளர்(ம)நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

;