இராஜபாளையம், அக்.12- இராஜபாளையத்தில் சர்வதேச பெண் குழந்தை கள் தினத்தையொட்டி கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகசாமி துவங்கி வைத்தார். காந்தி சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், கல்வி மற்றும் பாதுகாப்பை வலி யுறுத்தும் பதாகைகளை ஏந்தி 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் வைமா.திருப்பதி செல்வன், பள்ளி முதல்வர் அ.திருமலை ராஜன், விழா ஒருங்கிணைப்பா ளர் ரா.ரேஷ்மா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.