விருதுநகர், ஜூன்.13- அரசு உதவி பெறும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 6,7,8 ஆம் வகுப்பு களில் மாணவர்களுக்கு கற் பித்து வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அதே வகுப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் பணியி டத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் பின்பு மாண வர் எண்ணிக்கைக்கு ஏற்ப இளைய பட்டதாரி ஆசிரியர் களை பணியிடங்களில் உப ரியை கண்டறிந்து பணிநிர வல் செய்ய வேண்டும். மூத் தோராக உள்ள இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் கூடாது என வலி யுறுத்தி விருதுநகரில் இடை நிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவல கத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சங்கர் தலைமை யேற்றார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் செல்வகணேஷ் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்ற னர்.