districts

img

மதுரை கிழக்கு ஒன்றிய கிராமங்களில் சு.வெங்கடேசன் எம்.பி., ஆய்வு

மதுரை, மே 26-  மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  கிராமப் பகுதிகளான பூலாம்பட்டி,  (வலச்சிகுளம்), தாமரைப்பட்டி, பொருசுபட்டி, கள்ளந்திரி, வெள்ளி யங்குன்றம், யா.நரசிங்கம், யா. ஒத்தக்கடை (நீலமேகநகர்) ஆகிய  கிராம ஊராட்சிகளில் மக்களை சந்தித்து மனுக்கள் பெற்றார். பல்  வேறு மனுக்களுக்கு உடனடியாக  தீர்வுகண்டார். வலச்சிகுளம் கிரா மம், கள்ளந்திரி, வெள்ளியங் குன்றம், உள்ளிட்ட கிராமங்களில் பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து எம்.பி.யை வர வேற்றனர்.  வலச்சிகுளம் கிராமத்தில் பெரி யார் நிலையத்திலிருந்து மேலூர் பேருந்து நிலையத்திற்கு பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பேருந்துகள் வருகின்றன என்று புகார் தெரிவித்தனர். இது குறித்து  அரசு போக்குவரத்து அதிகாரி களை தொடர்பு கொண்டு பேசிய  எம்.பி., உடனடியாக பள்ளிக்குழந் தைகள் செல்ல காலை 8 மணிக்கு  பேருந்து வருவதை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்று கூறினார்.  தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி  வேண்டும் என்று கோரிய மனு விற்கு, அரசுக்கு பரிந்துரை செய்து ஏற்பாடு செய்வோம் என்றும் மேல்  நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைப்  பதாக உறுதி கூறினார்.  தாமரைபட்டி கிராமத்தில் பெண்கள் கழிப்பறை கேட்டு கோரிக்கை வைத்தனர். ரூ.5 லட் சத்தில் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இரண்டு மாத காலத்திற்குள் கட்டித் தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர்.  மின்வயர்கள் தாழ்வாகச் செல்  கின்றன என்று மக்கள் தெரிவித்த னர். உடனடியாக மின்வாரிய அதி காரிகளை அழைத்து சரி செய்யு மாறு எம்.பி., உத்தரவிட்டார். 

பேருந்து இயக்க பள்ளி மாணவர்கள் மனு 

பொருசுபட்டி கிராமத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 24 எச், 24 பி பேருந்துகள் சரியான  நேரத்திற்கு வருவதில்லை. பல  நேரங்களில் பேருந்துகளே வருவ தில்லை. இதனால் பள்ளி, கல்லூ ரிக்கு செல்ல முடியவில்லை. எனவே 7மணியில் இருந்து 8 மணிக்  குள் பேருந்து இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சு.வெங்க டேசன் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  உடனடியாக எம்.பி.,  போக்குவரத்துத்துறை அதிகாரி யை அழைத்து, பள்ளி மாணவர்கள் அளித்துள்ள மனு மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்  டும்.பேருந்து வருவதை உத்தர வாதப்படுத்த வேண்டும் என்று அறி வுறுத்தினார்.

மூதாட்டிக்கு பென்சன் 

பொருசுபட்டியைச் சேர்ந்த சின்னமாள்(85) என்ற மூதாட்டி, பல  மாதங்களாக தனது வங்கி கணக்  கில் முதியோர் பென்சன் வர வில்லை என புகார் அளித்தார். உட னடியாக எம்.பி., அதிகாரியை அழைத்து இந்த பிரச்சனை குறித்து வங்கியில் தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்ய  வேண்டுமென கூறினார். அதிகாரி  தொடர்பு கொண்டு பேசி, வங்கிக்  கணக்கில் ஏதோ தவறு இருப்ப தாகவும். அது சரியாகிவிட்டது. நாளை மூதாட்டியின் பணம் வங்கிக் கணக்கில் ஏற்றப்படும் என்று உறுதி கூறினார். அதற்கு அந்த மூதாட்டி  எம்.பி.யை பார்த்து கைகூப்பி நன்றி கூறினார். உடனடியாக நிறைவேற் றப்பட்ட கோரிக்கைக்கு கிராம மக்  கள் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர். கள்ளந்திரி கன்னிமார் கோவில் கண்மாயை தூர் வாரக் கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு  அளித்தும் நிறைவேற்றப்பட வில்லை. எனவே தங்களிடம் மனு  அளிப்பதாக கூறினர். பொதுப் பணித்துறை அதிகாரியிடம் இது குறித்து விளக்கம் தெரிவிக்க கூறி னார். இரண்டு மாத காலத்திற்குள் கண்மாய் தூர்வாரப்படும் என்று அதிகாரி உறுதியளித்தார்.  கடந்த ஆண்டு 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்த பணம் ஏறவில்லை என்று அம்சு என்பவர் எம்.பி.யிடம் முறையிட்டார். அதற்கு எம்பி., துறை சார்ந்த அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். விரைவில் பணம் ஏறும் என்று உத்தரவாதம் அளித் தார். 

உடனடி பட்டா

கள்ளந்திரி கிராமம், வலச்சி குளம்உள்ளிட்ட கிராமங்களில் உடனடியாக வட்டாட்சியர் முன்னி லையில் உடனடி பட்டா நகலை எம்.பி வழங்கினார்.  வெள்ளியங்குன்றம் குடிநீர் போர்வெல் கேட்டு மனு அளித்த னர். கூடிய விரைவில் அமைத்துத் தரப்படும் என எம்.பி உறுதி யளித்தார்.  யா.நரசிங்கம் ஊராட்சியில் பேருந்து நிறுத்த நிழற்குடை கேட்டு  மனு அளித்தனர். உடனடியாக கட்டித்தர ஏற்பாடு செய்வோம். அதற்கு சரியான இடத்தினை தேர்வு செய்து தருமாறு கூறினார். 

எம்.பி.யை பாராட்டி ஊராட்சி தலைவர் 

யா.ஒத்தக்கடை ஊராட்சி தலை வர் முருகேஸ்வரி சரவணன் பேசு கையில், மக்களுக்கான எம்.பி. என்றால் இவர் தான். மதுரை நாடா ளுமன்ற தொகுதிக்கு கிடைத்த நல்ல மனிதர். தொகுதி மேம்பாட்டு நிதியினை மக்கள் நலத்திட்டங்க ளுக்கு பயன்படுத்தி வருகிறார். மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து சு.வெங்க டேசன் எம்.பி., பேசுகையில், ஒத்தக்  கடைக்கு தேசிய நெடுஞ்சாலை யில் இருந்து சர்வீஸ் ரோடு கேட்டு  கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு திருமோகூர் செல்  லும் சாலையில் சர்வீஸ் ரோடு  அமைத்து தர உத்தரவு வந்துள்ளது.  விரைவில் அந்த பணி துவங்கும் என்றார். நாடாளுமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து நீலமேகம் நகர் பகுதியில் கட்டுப்பட்டு வரும் ரேசன் கடையினை பார்வை யிட்டார். 

மாணவிக்கு எம்.பி.,பாராட்டு

வலச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த யோகிதா என்ற மாணவி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 540 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அந்த மாணவியை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சால்வை அணிவித்து பாராட்டி னார். இந்த சுற்றுப்பயணத்தல் வட்டாட்சியர் (கிழக்கு) பழனி குமார், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சுந்தர்சாமி, வில்சன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநி லக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலுகாச் செயலாளர் எம். கலைச்  செல்வன், தாலுகாக்குழு உறுப்பி னர் மலர், மற்றும் சாமிக்கண்ணு, சோனை உட்பட பலர் கலந்து கொண்டனர்.