districts

img

போதைக்கு எதிராக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

மதுரை, மார்ச் 11-  இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும்  அன்னை  தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கீழக்குயில்குடி ஊராட்சி இணைந்து மக ளிர் தின விழா மற்றும் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது.  நாகமலை பகுதி செய லாளர் திருதரன் தலைமை வகித்தார்.  வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் க.தமிழ ரசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் க.பிரேமலதா, மாணவர் சங்க மாவட்ட  செயலாளர் கா.பிருந்தா.ஆகியோர் உரையாற்றினர். அன்னை தெரசா பல்க லைக்கழக முதல்வர் புஷ்பா மற்றும் கீழக்குயில் குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அரிச்சந்திரன் மற் றும் மாணவிகள், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இளையான்குடி  இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில்  இளையான்குடி பசுமை நகர்  மாரநாதா ஜெய ஆலயத்தில்  போதைக்கு எதிராக கை யெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இன்னாசிராஜா தலைமை வகித்தார. பாதிரி யார் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். மாவட்ட செய லாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.