districts

img

திண்டுக்கல்-பழனியில் சுதந்திர தின கருத்தரங்கம்

திண்டுக்கல்.ஆக.18- சுதந்திரத்தை பாது காப்போம், மதச்சார்ப் பின்மையை உயர்த்திப் பிடிப்போம் என்ற முழக்கத்து டன் திண்டுக்கல்லில் திறந்த வெளிக் கருத்தரங்கம் திங்களன்று நடைபெற்றது.  சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம், விவ சாயிகள் சங்கங்கள் சார்பாக நாகல்நகரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சிக்கு சி.பி.ஜெயசீலன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.ஆர்.கணேசன், மாவட்டச்செயலாளர் கே.பிர பாகரன், பொருளாளர் தவக் குமார், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத்தலைவர் பி.வசந்தாமணி, மாவட்டச் செயலாளர் கே.அருள்செல் வன், விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் என். பெருமாள், மாவட்டச்செய லாளர் எம்.ராமசாமி, விவ சாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அம்மையப்பன், பழனிச்சாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், பவுல் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  பழனி  பழனியில் மக்கள் ஒற்று மை மேடையின் சார்பாக சுதந்திர தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்த ரங்கில் தமுஎகச தலைவர்க ளில் ஒருவரான சூர்யா சேவியர் சிறப்புரையாற்றி னார்.  இந்நிகழ்ச்சிக்கு கே. ஜீவானந்தம் தலைமை வகித்தார். முருக பக்தர் பேரவை சார்பாக கே.நாரா யணன், பழனி முஸ்லீம் தர்ம பரிபாலன சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.முகமது அலி, பங்குத் தந்தை  ஸ்டான்லி ராபின்சன்,  முன் னாள் நகர் மன்றத் தலைவர் வி.இராஜமாணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட  அமைப்பாளர் கே.எஸ்.கணேசன் வர வேற்புரையாற்றினார். டி. சந்தானம் நன்றி கூறினார்.