திருவில்லிபுத்தூர், ஆக.17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் திருவில்லிபுத்தூர் கிரீன் சிட்டி, பாரதி புத்தகாலயம் மற்றும் கமலா நடராஜன் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் சுதந்திர தின புத்தக கண்காட்சி ஆனந்தா வித்தியாலயா பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. தமுஎகச கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் நித்தியானந்தம் வர வேற்றார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ராஜசேகர் ஆனந்தகுமார் பங்கேற்றார். முதல் புத்தக விற்பனையை கூட்டுறவு துணை பதிவாளர் ஸ்ரீமான் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் அன்னக்கொடி வாழ்த்தி பேசினார். தமுஎகச மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன் சிறப்புரையாற்றி னார். சிறுதானிய நன்மைகள் பற்றி வேளாண்மை இணை இயக்குநர் முத்து முனியாண்டி உரையாற்றி, பள்ளி குழந்தைகளுக்கு காய்கனி விதைகளை வழங்கினார்