districts

img

சின்னாளபட்டியில் ஓணம் சேலை தயாரிப்பு அதிகரிப்பு

திண்டுக்கல், ஆக.9- ஓணம் திருவிழாவிற்காக சின்னாள பட்டியில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர் டர்கள் குவிவதால் ஓணம் சேலைகள் தயாரிப்பு அதிகரித்துள்ளன. இத னால் நிறுவன உரிமையாளர்கள் மற்  றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.  ஆகஸ்ட் 28 அன்று கேரள மாநி லத்தில் ஓணம் பண்டிகை கொண்டா டப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு எப்படி  தீபாவளியோ, அதே போல கேரளா விற்கு ஓணம் பண்டிகை. புத்தாடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு கேரள  மாநில மக்கள் ஒவ்வொரு குடும்பத்தி லும் கொண்டாடுகிற ஒரு நிகழ்வாகும்.  அந்த நிகழ்வில் பெண்கள் கட்டுகிற விஷேசமான கசவு சேலைகள். ஆண்  கள் இடுப்பில் கட்டுகிற வஸ்திரங்கள். குழந்தைகளுக்கான உடைகள் எல்லாம் சின்னாளபட்டியில் தயாரித்து அனுப்பப்  படுகிறது.  ஏற்கனவே சுங்குடி சேலை உற்பத்தி யில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கெடு பிடியால் ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓணம்  பண்டிகை கசவு சேலைகளுக்கு ஸ்கிரின் பிரிண்ட் செய்து தரும் வேலைக்கான ஆர்டர் கிடைத்திருப்பது ஓரளவு சின்னாளபட்டி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விசயமாகும்.  கிருஷ்ணன், ராதையுடன் கிருஷ்ணன், வீணை மயில் என பல  வண்ணங்களில்  கடவுளின் உரு வங்களை கசவு சேலைகளில் ஸ்கீரின் பிரிண்ட் செய்து அனுப்பப்படுகிறது.  வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்  இந்த சேலைகளில் இது போன்ற வண்ணங்களை பார்டர்களாக கொண்டு ஈர்க்கும் வகையில் உள்ள தால், கேரள பெண்கள் மத்தியில் சின்னாளபட்டி சேலைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.  இதற்காக அதிக அளவில் ஆர்டர் கள் குவிகின்றன. ஒரு நிறுவனத்தில் நாளைக்கு 300 முதல் 500 சேலை கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாதத்தின் இறுதியில் ஓணம் வருவதால்  இன்னும் சில நாட்களே உள்ள நிலை யில் பணிகள் இரவு பகலாக நடைபெறு கின்றன. இதனால் நிறுவனத்தின் உரி மையாளர்களும், இதில் வேலை செய்யும் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஒரு காலத்தில் சுங்குடி சேலை களுக்கு பிரபலமாக இருந்த  சின்னாள பட்டி தற்போது ஓணம் சேலைகள் தயா ரிப்பிலும் முக்கிய இடமாக விளங்கு கிறது.                    (ந.நி.)